குருந்தூர்மலையில் சிவலிங்கத்தை ஒத்த உருவம் வெளிப்பட்டுள்ளது

229 0

அகழ்வாராய்ச்சி இடம்பெற்றுவரும் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் அகழ்வாராய்ச்சியில் சந்தேகத்துக்கு இடமான சிவலிங்கத்தை ஒத்த இடிபாடுகள் வெளிப்பட்டுள்ளன.

தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர்மலை பகுதியில் சிவலிங்கத்தை ஒத்த சந்தேகத்துக்கிடமான தொல்லியல் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 18 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவால் குருந்தூர்மலையில் குருந்தாவசோக புராதன விகாரையின் சிதைவுகள் இருப்பதாக தெரிவித்து தொல்லியல் ஆய்வுப்பணிகள் ஆரம்பித்து வைக்கபட்டுள்ள நிலையில் தொல்லியல் திணைக்களத்தோடு இராணுவம் இணைந்து தொல்லியல் அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த சந்தேகத்துக்கிடமான சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.