மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று 3 ஆவது நாளாக வவுனியாவில் இருந்து ஆரம்பம்!

211 0

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை என்ற மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று 3 ஆவது நாளாக வவுனியாவில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.

நேற்றையதினம் திருகோணமலையில் இருந்து ஆரம்பமாகிய குறித்த பேரணி நிலாவெளி, திரியாய், புல்மோட்டை, தென்மரவடி, மணலாறு, செம்மலை நீராவியடி, அளம்பில் உடுப்புக்குளம், சிலாவத்தை முல்லைத்தீவு நகர், வட்டுவாவல் பாலம், முள்ளிவாய்க்கால் நினைவிடம், புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், நெடுங்கேணி வழியாக வவுனியாவை சென்றடைந்தது.

இந்நிலையில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை என்ற மபொரும் மக்கள் எழுச்சிப் பேரணி இன்றையதினம் வவுனியாவில் இருந்து ஆரம்பமாகி வடக்கு நோக்கி நகரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.