தடைகளின் மத்தியிலும் தொடரும் தமிழரின் 2ம் நாள் போராட்டம்

305 0

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் 2ஆம் நாள் பயணம் மட்டக்களப்பில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.

நேற்றைய போராட்டம் மட்டக்களப்பு தாழங்குடாவில் முடிவடைந்தது. இந்த நிலையில், இன்று காலை 8.30 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து போராட்டம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

காத்தான்குடி, மட்டக்களப்பு நகரம், ஓட்டமாவடி, செங்கலடி என நீளும் போராட்டம் திருகோணமலையை அடைந்து, அங்கிருந்து கொக்கிளாய் ஊடாக இன்று மாலை முல்லைத்தீவு நகரத்தை அடையவுள்ளது.