கிழக்கு மாகாணத்தின் உயரமான கிறிஸ்மஸ் மரம் திறந்து வைக்கப்பட்டது(படங்கள்)

296 0

chirismass-tree-3 கிழக்கு மாகாணத்தில் உயரமான கிறிஸ்மஸ் மரம் மட்டக்களப்பில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு பார்வீதி புளியடிக்குடா புனித லூர்து அன்னை ஆலயத்தின் ஒளிவிழாவும் கிறிஸ்மஸ் மரம் திறப்பு விழாவும் நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

ஒளிவிழா நிகழ்வில் அருட்தந்தை கிரிஸ்டி அவுஸ்கோன் மற்றும் அருட்தந்தை நவரெட்னம் அடிகளார் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு மக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் பாலன் பிறப்பு காட்சியும் காண்பிக்கப்பட்டதுடன் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி லோகநாதன் அடிகளாரின் வழிகாட்டலின் கீழ் மோசஸ் மற்றும் ஜோர்ஜ் ஆகியோரின் நெறிப்படுத்தலின் கீழ் 30 அடி உயிரம் கொண்ட இந்த கிஸ்மஸ்மரம் ஒளியூட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

முதன்முறையாக இளைஞர், யுவதிகள் ஒன்றியத்தின் உழைப்பினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்மஸ் மரத்தை அருட்தந்தை நவரெட்னம் கலந்து கொண்டு வழிபாடுகளை மேற்கொண்டு திறந்துவைத்தார்.

 

chirismass-tree chirismass-tree-5 chirismass-tree-4 chirismass-tree-3