கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் சிவன் ஆலயத்தையும் விட்டுவைக்காத தேரர்! தொல்லியல் மூலம் கையகப்படுத்த முயற்சி

254 0

கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் சிவன் ஆலயத்திற்கு அருகில் தொல்லியல் அடையாளங்கள் இருப்பதாகக் கூறி தொல்லியல் திணைக்களம் அங்கும் ஆய்வுகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்கின்றமையளினால் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் திணைக்களத்தினர் அண்மையில் குறிப்பிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்த நிலையில் நேற்றையதினம் அப்பகுதிக்கு பௌத்த தேரர் ஒருவர் நண்பகல் வேளையில் வருகை தந்ததாகவும் பிக்கு சென்ற சில மணித்தியாலங்களின் பின்னர் அப்பகுதிக்கு பொலிஸார் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

பின்னர் மாலை வேளையில் இராணுவத்தினர் வருகை தந்து அவ்விடத்தை பார்த்து சென்றதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் பரபரப்பான நிலை காணப்படுகிறது. ஏற்கனவ தொல்லியல் திணைக்களத்தால் அப்பகுதி அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.