கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன

193 0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுத்துள்ளார்.

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான முன்மொழிவை உருவாக்க கட்சி தவறிவிட்டது என குறிப்பிட்டு அர்ஜுன ரணதுங்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அத்தோடு ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த துணைத் தலைவராக தான் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இந்த பதவியை ஏற்க வேண்டாம் என தான் முடிவு செய்துள்ளதாக அர்ஜுன ரணதுங்க, ரணில் விக்ரமசிங்கவிற்கு தெரிவித்துள்ளார்.