வடக்கில் தனியார் கல்வி நிலையங்களை மீளத்திறக்க அனுமதி

157 0

கொவிட் – 19 தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப்பட்ட தனியார் கல்வி நிலையங்களை நேற்று 25ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் மீள ஆரம்பிக்க அனுமதியளிக் கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சால் வழங்கப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைவாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வடக்கு மாகாணத்தில் தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் பிரத்தியேக வகுப்புகளை நடத்த வேண்டும் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன், ஒவ்வொரு பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியும் தனியார் கல்வி நிலையங்களில் கொவிட் – 19 சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதைக் கண்காணிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வகுப்பில் இருக்கைகளின் திறனில் 50 சதவீதம் வரை அல்லது அதிகபட்சம் 100 மாணவர்களுக்கு மட்டுமே இடமளிக்க முடியும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயணத் தடை மற்றும் தனிமைப்படுத்தல் அமுலிலுள்ள பகுதிகளில் தனியார் கல்வி நிலையங்களை நடத்த முடியாது என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.