தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்காக இரண்டு தடுப்பூசிகள் பரிந்துரை

215 0

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்காக இரண்டு தடுப்பூசிகள் அரசாங்கத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த வியடம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா மறறும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளின் பாவனைக்கு ஒப்புதல் கோரியே அரசாங்கத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக நிபுணர்களின் குழு ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி போட இலங்கை திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளை வழங்க தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்காக இந்தியா காத்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.