புத்தரின் போதனைக்கு மாறாகவே அரசாங்கம் செயல்படுகிறது – முஜிபுர்

195 0

கொரோனா தொற்றால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பில் அரசாங்கம் புத்தரின் போதனையின் பிரகாரம் செயல்படுவதுமில்லை விஞ்ஞான ரீதியிலான தீர்மானத்துக்கும் அனுமதிப்பதில்லை.
அத்துடன் மரணிப்பவர்களை எரிக்கலாம் என உதய கம்பன்பில குர்ஆன் தொடர்பில் பிழையான கருத்தை தெரிவித்திருக்கின்றார் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:

அரசாங்கம் பௌத்த சிந்தனையின் பிரகாரம் செயல்படுவதும் இல்லை. அரசாங்கம் அமைத்த விசேட வைத்தியர் குழுவின் தீர்மானத்துக்கமைய செயல்படுவதும் இல்லை.

விசேட வைத்தியர் குழு அடக்கம் செய்வதற்கு அனுமதி அளித்திருக்கின்றது. அதனை அரசாங்கம் மறைத்துவருகின்றது. அதனால் அரசாங்கம் எந்த சிந்தனையில் செயல்படுவதென்று யாருக்கும் தெரியாமல் இருக்கின்றது எனத் தெரிவித்தார்.