ஹம்பாந்தோட்டை அரச அலுவலர்களுக்கு தமிழ் மொழி பயிற்சி

187 0

ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் பணிபுரியும் அரசாங்க அலுவலர்களுக்கான தமிழ் மொழி பயிற்சித் திட்டம் அண்மையில் மாகம் ருஹுணுபுர நிர்வாக வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.


தேசிய மொழிகள் சமூக ஒருங்கிணைப்புப் பிரிவு ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சித் திட்டத்தை மாவட்ட செயலர் டபிள்யூ.எச்.கருணாரத்னே ஆரம்பித்து வைத்தார்.

அரசாங்க அலுவலர்களுக்கான 150 மணி நேர தமிழ்மொழி பயிற்சித் திட்டம் பொது நிர்வாக சுற்றறிக்கை 18/2020இன் கீழ் செயற்படுகிறது.

இப்பாடநெறியை வாரத்தில் இரு நாட்கள் நடத்தி 2021 ஏப்ரலில் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.