டிக்கோயா வைத்தியசாலையின் தாதிக்கு கொரோனா

202 0

டிக்கோயா வைத்தியசாலையின் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த தாதிக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டிக்கோயா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து அவரை சிகிச்சை நிலையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலம் டிக்கோயா வைத்தியசாலையின் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.