நெடுந்தீவுக்கு அண்மையில் கடலில் மூழ்கியது இந்திய மீனவப் படகு

237 0

நெடுந்தீவிலிருந்து வடமேல் திசையில் சர்வதேச கடற்பரப்பிலிருந்து 8 கடல் மைல் தூரத்தில் சட்ட விரோத இந்திய மீனவப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என இலங்கைக் கடற்படையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்தப் படகினையும் அதிலிருந்த இந்திய மீனவர்களையும் மீட்கும் நடவடிக்கைகளில் கடற்படை தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர்  தெரிவித்தார்.

கடற்படையின் தகவல்களுக்கு அமைய, சர்வதேச கடல் எல்லையை மீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய படகு கடற்படையினரின் எச்சரிக்கையை மீறி தப்பிச் செல்ல முயன்ற நேரம், கடற்படையின் தாக்குதல் படகுடன் மோதச் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் போது சமநிலையை இழந்து நீரில் மூழ்கி விபத்திற்குள்ளாகியுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.