சிறிலங்காவின் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்தவுடன் நெருங்கிப் பழகிய 22 பேர் சுய தனிமைப்படுத்தல்

203 0

கொவிட் தொற்றுக்குள்ளான சிறிலங்காவின் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த, அவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் கொக்கல பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சரின் இரண்டு மகன்கள், சாரதி, பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் செயலாளருக்கு கொவிட் தொற்று ஏற்படவில்லை என மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அமைச்சருடன் நெருங்கிப் பழகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 பேருக்கு சுய தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

நேற்றைய தினம் (18) மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனையில் இராஜாங்க அமைச்சருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவின் சாரதிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கேகாலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.