மன்னாரில் மேலும் ஐவருக்கு கொரோனா..!

244 0

மன்னார் மாவட்டத்தில் மேலும் 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 1682 பேருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகள் இந்த வாரம் சிவப்பு எச்சரிக்கை வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.