ஹம்பாந்தோட்டை துறைமுக பணியாளர்கள் போராட்டம்

281 0

hambantota-protestஹம்பாந்தோட்டை துறைமுக பணியாளர்கள் முன்னெடுத்த போராட்டத்தை கலைக்க இன்று பாதுகாப்பு படையினர் முயற்சிகளை மேற்கொண்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை உருவாகியது.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் உட்பட இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமானதல்ல என்று மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தம்மை துறைமுக அதிகாரசபையில் இணைத்துக் கொள்ளுமாறு கோரி மாஹகும்புர முகாமைத்துவ தனியார் நிறுவனத்தின் பணியார்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

குறித்த நிறுவனத்தின் 483 பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் தோல்வியடைந்ததால் சத்தியாக்கிரகத்தை தொடர்ந்து முன்னெடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.