போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் கைது..!

232 0

மட்டக்களப்பில் நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறைக்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த இரண்டு பேரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களிடம் இருந்து சுமார் 3 லட்சம் பெறுமதியான 11 கிராம் 20 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு பேரும் செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதிகள் எனவும் நீண்டகாலமாக இந்த போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைதானவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, நீர்கொழும்பு கடலில் போதைப்பொருட்களை கடத்திச் சென்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படை இதனை தெரிவித்துள்ளது.

கைதானவர்களிடமிருந்து 100 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருளும் 80 கிலோ ஹசீஸ் ரக போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 600 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.