மரங்கள் வெட்டி அகற்றப்பட்டமை தொடர்பில் அறிக்கை கோரும் மகிந்த அமரவீர!

298 0

குருநாகல் – ரஜபிஹில்ல பூங்காவில் இருந்த பழமைவாய்ந்த 28 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டமை தொடர்பில் தமக்கு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர, மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் தலைவருக்கு இன்று ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த மரங்களை அகற்றுவதற்காக மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை அல்லது மாவட்ட அதிகாரிகள் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் ஆராயுமாறும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

கொவிட் 19 பரவல் நிலையை வனங்களை அழிப்பதற்காக சிலர் பயன்படுத்தி வருவதாக அமைச்சர் மகிந்தர அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

எனவே உடனடியாக அதிகாரிகளை ஈடுபடுத்தி அது தொடர்பில் ஆராயுமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்