யாழ். மருதனார்மடம் கொரோனா கொத்தணி எண்ணிக்கை அதிகரிப்பு!

202 0

யாழ். மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) 416 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதில், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி, மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77ஆக அதிகரித்துள்ளது.