இன்று காலை முதல் பல பிரதேசங்கள் முடக்கம்!

236 0

நாட்டில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய பொலிஸ் அதிகார பிரிவுகள் இன்று காலை 06 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில்

அக்கரைப்பற்று – 5
அக்கரைப்பற்று – 15
அக்கரைப்பற்று நகரம் – 3

அட்டாளைச்சேனை பொலிஸ் பகுதியில்,

பாலமுனை – 1
ஒலுவில் – 2
அட்டாளைச்சேனை – 8

ஆலையடிவேம்பு பொலிஸ் பிரிவில்

ஆலையடிவேம்பு – 8/1
ஆலையடிவேம்பு – 8/3
ஆலையடிவேம்பு – 9

அதேபோல், மொனராகலை மாவட்டத்தின் அலுபொத கிராம உத்தியோகத்தர் பிரிவும் தற்போதைய நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.