கொழும்பு மாவட்டத்தில் மேலும் 309 பேருக்கு கொரோனா

197 0

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்ட 643 பேரில் 309 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித் துள்ளது.

அதில் கிராண்ட்பாஸ் பகுதியில் 69 பேர், மட்டக்குளி பகுதியில் 62 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் 119 பேர் , கம்பஹா மாவட்டத் தில் 104 பேர், காலி மாவட்டத்தில் 28 பேர், மாத்தறை மாவட் டத்தில் 15பேர் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குருணாகல், கண்டி ஆகிய மாவட்டங்களில் தலா 08 பேர் என்ற அடிப் படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அம்பாறை, பதுளை ஆகிய மாவட்டங்களில் தலா 04 பேர் என்ற அடிப் படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நுவரெலியா, கேகாலை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் தலா 02 பேர் என்ற அடிப் படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

புத்தளம் ,மட்டக்களப்பு, அனுராதபுரம், திருகோணமலை, மன்னார் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப் படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 21 பேர் கொ ரோனா தொற் றாளர்களாக நேற்றைய தினம் அடை யாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப் பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.