தனிமைப்படுத்தல் நிலை தொடர்கிறது…………

243 0

பாணந்துறை – தொட்டவத்த மற்றும் மொனராகலை மாவட்டத்தின் படல்கும்புரயிலுள்ள அலுபொத்த ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் அடையாளங்காணப்பட்டதை அடுத்து நேற்று முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மற்றும் புதிதாக தனிமைப்படுத்தப்படவுள்ள பிரதேசங்கள் குறித்த விபரங்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை கொவிட்19 தடுப்பு செயற்பாட்டு மையம் வெளியிட்டிருந்தது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் வெள்ளவத்தை மயூரா பிரதேசம், முகத்துவாரம், கொட்டாஞ்சேனை, கிரேண்ட்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, டேம்வீதி, வாழைத்தோட்டம், தெமடகொடை, மாளிகாவத்தை, மருதானை ஆகிய காவற்துறை அதிகாரப் பிரிவுகளும், கொம்பனித்தெருவின் வேகந்த கிராமசேவகர் பிரிவும், பொரளையில் உள்ள வனாத்தமுல்லை கிராமசேவகர் பிரிவும், வெல்லம்பிட்டியில் உள்ள சாலமுல்ல கிராமசேவகர் பிரிவும் லக்சந்த செவன வீட்டுத்திட்டம் என்பனவும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக பேணப்பட்டு வருகின்றன.

கம்பஹா மாவட்டத்தில் பேலியகொடை காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட பேலியகொடவத்த, பேலியகொட கங்கபட, மீகஹாவத்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் உள்ளன.

கிரிபத்கொடை காவல்துறை அதிகார பிரிவில் வெலேகொட வடக்கு பகுதியும், நீர்கொழும்பு காவல்துறை அதிகார பிரிவிற்குட்பட்ட எம்.சி.குடியிருப்பு தொகுதி மற்றும் வெயாங்கொடை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹிரிப்பிட்டிய தெற்கு கிராம சேவகர் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் நிலை தொடர்கிறது.

வத்தளை காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட கெரவலபிட்டிய கிராம சேவகர் பிரிவிலுள்ள நைய்துவ பகுதியும் வெலிகடமுல்ல கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட துவே வத்த பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் பேலியகொடை காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட பட்டியமுல்ல கிராம சேவகர் பிரிவிலுள்ள ரோஹனவீர மாவத்தை பகுதியும் தற்போதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கிரிபத்கொடை காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட ஹுணுப்பிட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவுக்குபட்ட வெலிகந்த பகுதியும் நிட்டம்புவ காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட திஹாரி வடக்கு மற்றும் திஹாரி கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வாரன பன்சல வீதி, கத்தோட வீதி மற்றும் இன்ரா மாவத்தை பகுதிகளும் கடந்த திங்கட் கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

இதேவேளை களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்க பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேகங்கல்ல கிழக்கு மற்றும் வேகங்கல்ல மேற்கு கிராம சேவகர் பிரிவுகள், சிறிய ஹீனிடியங்கல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதேநேரம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை அல்லாத நாட்டின் ஏனைய மாவட்டங்களில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் மறு அறிவித்தல் வரையில் அவ்வாறே பேணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது