அமெரிக்கா: லொஸ் ஏஞ்சலசில் கொரோனாத் தொற்றுக்குப் பலியாவோர் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந் நிலையில் கடந்த வாரம் ஒவ்வொரு 20 நிமிடத்திலும் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக அந் நகரத்தின் மேயர் எரிக் கார்செட்டி ( Eric Garcetti )தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா சிகிச்சைக்கான அவசர படுக்கைகளுக்கு தட்டுப்பாடு எற்பட்டுள்ளதால் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மற்றோர் டுவிட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார். லொஸ் ஏஞ்சலசில் அமெரிக்காவிலேயே அதிகமாக கொரோனா தொற்று எண்ணிக்கையாக, 5 லட்சத்தை கடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.