எஸ்வடினி பிரதமர் கொரோனாத் தொற்றினால் மரணம்!

259 0

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான எஸ்வடினி (Eswatini) பிரதமர் அம்ப்ரோஸ் டிலாமினி (Ambrose Dlamini), கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் தனது 52 ஆவது வயதில் காலமானார்.

நான்கு வாரங்களுக்கு முன்னர் கொரோனாத் தொற்றினால் ல் பாதிக்கப்பட்ட அவர், உயர் சிகிச்சைக்காக தென் ஆரிக்காவுக்கு  அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு, நாளடைவில் அவரது உடல்நிலை மோசமான நிலையில், அம்ப்ரோஸ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்ததாக அந் நாட்டு அரசு அறிவித்துள்ளது.