யாழ் மாவட்ட செயலரைச் சந்தித்த ஆப்கானிஸ்தான் சிவில் சமூக தலைவர்கள்(படங்கள்)

259 0

jaffna-3யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கும் ஆப்கானிஸ்தான் சிவில் சமூக தலைவர்கள் குழுக்களுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

ஆப்கானிஸ்தானின் சென்ரபோ ஃகியூமன் கேரியன் அஃப்பெயர்ஸ் நிறுவனத்தின் சிவில் சமூக தலைவர்கள் குழுவினர் நேற்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

சீ.எச்.ஏ நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இச்சந்திப்பில் போர் முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்று வருகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் மக்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்கின்றது என்பது பற்றியும், சுகாதார மற்றும் கல்வி வசதிகளின் நிலை தொடர்பாகவும் ஆப்கானிஸ்தான் சிவில் சமூக தலைவர்கள் குழுவினர் கேட்டறிந்து கொண்டதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் குறிப்பிட்டார்.

கடந்த நவம்பர் மாதம் 28ஆதம் திகதி இலங்கைக்கு வந்த ஆப்கானிஸ்தான் குழுவினர் அநுராதபுரம், கண்டி மற்றும் கிளிநொச்சி உட்பட பல மாவட்டங்களுக்கு சென்று சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளனர்.

போருக்குப் பின்னர் இலங்கையின் நிலமைகள், சமாதான  மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் பற்றியும், நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள், மக்களின் கலாசார நிலமைகள் போன்ற பல விடயங்களை ஆராயும் வகையில் ஆப்கானிஸ்தான் சிவில் சமூக தலைவர்கள் குழுவினரின் வருகை அமைந்திருந்தது.

jaffna jaffna-2 jaffna-1