வவுனியா, பேராற்றில் காணாமல் போன மாணவனின் சடலம், இன்று (06) காலை மீட்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பேராறு நீர்த்தேக்கத்தை பார்வையிடுவதற்காக வவுனியா விபுலானந்தாக் கல்லூரி மாணவன் தி.தனுசன் நண்பர்களுடன் சென்றிருந்தார்.
இந்நிலையில், நீரில் இழுத்துச்செல்லப்பட்ட தனுசன் பலத்த தேடுதலின் போதும் கண்டு பிடிக்கப்படாத நிலையில், அவரது சடலம் நீர்ப்பகுதியில் மிதந்துள்ளமையை அடுத்து நேற்றுக்காலை மீட்கப்பட்டுள்ளது.

