வவுனியாவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

263 0

வவுனியா- கல்மடு, ஈஸ்வரிபுரம் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா- கல்மடு, ஈஸ்வரிபுரத்தை சேர்ந்த 22 வயதான குறித்த இளைஞன், கொழும்பு கொட்டேனாவிலுள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் 14நாட்கள் குறித்த இளைஞன் தனிமைப்படுத்தப்பட்டு, பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கொரோனா தொற்று பீடிக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வவுனியாவில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன், கடந்த 22ம் திகதி, கல்மடு- ஈஸ்வரிபுரத்திலுள்ள தனது வீட்டிற்கு சென்றபோது, மீண்டும் 14நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 2ம் திகதி பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் இளைஞனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நேற்று இரவு கிளிநொச்சி தனிமைப்படுத்தல் மையத்திற்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.