பொன்னாலை கடலில் கடல் தொழிலுக்கு சென்ற தொழிலாளி மாயம்!

230 0

பொன்னாலை கடலில் கடல் தொழிலுக்கு சென்ற தொழிலாளி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

சுழிபுரம் பெரியபுலோவை சேர்ந்த செல்வராசா செல்வக்குமார் (வயது-37) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே நேற்றிரவு 8 மணியளவில் காணாமல் போயுள்ளார்.

பிரதேச மக்களும் தொழிலாளர்களும் இணைந்து இவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வலி.மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் பொன்னாலை வட்டார உறுப்பினர் ஆகியோர் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து வருகிறார்கள்