சோ ராமசாமியின் வாழ்க்கை குறிப்பு

270 0

cho-ramaswamy-1சோ ராமசாமி பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் போன்ற பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர். சோ என அழைக்கப்படுகிறார்.

துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவுநர் மற்றும் ஆசிரியர் ஆவார்.

இவரின் ‘அரசியல் நையாண்டி’ எழுத்துக்கள் இவருக்கு ‘பத்திரிக்கை உலகில்’ தனி இடம் வகுத்து தந்தது.

சோ ராமசாமி சென்னையில் பிறந்தவர். இவருடைய தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள்.

இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர் நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை லயோலா கல்லூரியிலும் பயின்று இளநிலை அறிவியல் பட்டப்படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றார்.

பின் 1953-55-ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று இளநிலைச்சட்டப் படிப்பில் பட்டம் பெற்றார்.

1957 முதல் 1962 வரை சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.

1962 முதல் டி.டி.கே நிறுவனத்திற்கு சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார்.

இவருக்கு 1966ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

‘சோ’ எனும் பெயர் பகீரதன் எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயர்.

1957 ஆம் ஆண்டு நாடகங்களை எழுத ஆரம்பித்தார்.

1970ஆம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கினார்.

பின்னர் 1976ஆம் ஆண்டில் PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார்.

இவர் 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்குக் கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார்.

இவர் தனது பத்திரிக்கைத்துறைச் சேவைக்காக 1985 இல் ‘மஹாரான மேவார்’ வழங்கிய ஹால்டி காட்டி விருதும், 1986 இல் வீரகேசரி விருதும், 1994 ஆம் ஆண்டு கொயங்கா விருதும், 1998 இல் நச்சிக்கேதஸ் விருதும் பெற்றுள்ளார்.

இவர் 22 நாடகங்களையும், 8 புதினங்களையும், அரசியல், கலை எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இவரது முகமது பின் துக்ளக் என்னும் ‘அரசியல் நையாண்டி’ நாடகம் மிகவும் புகழ் பெற்றது. இது பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது.

இந்தநிலையில், மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சோ சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று அவருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. மூச்சுத் திணறல் அதிகம் ஏற்பட்டு இன்று காலை சோ ராமசாமி காலமானார்.

201612070617499590_multi-faceted-cho-ramaswamy-some-facts_secvpf cho-ramaswamy-1

(H†)¶‚÷‚ ÝCKò˜ «ê£.ó£ñê£I ÝvðˆFKJ™ e‡´‹ ÜÂñF    ...â¡ø H†´‚°Kò ðì‹.
maxresdefault ntlrg_20161207060655646720