லசந்த விக்கிரம படுகொலை மீண்டும் படங்களை வெளியிட்டுள்ளது காவல்துறை!

451 0

suspects-lasantha-murderஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரின் படங்களை மீண்டும் வெளியிட்டுள்ளது சிறீலங்காக் காவல்துறை.

லசந்த விக்கிரம படுகொலையை நேரில் பார்த்த சாட்சிகளான இருவரின் வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படங்கள் வரையப்பட்டுள்ளன. 35 வயது மதிக்கத்தக்க முதலாவது நபர் சுமார் 5அடி 8 அங்குலம் உயரமுடையவர் என மதிப்பிடப்பட்டுள்ளது. பொதுநிறம் கொண்ட இவரின் கண்கள் கபில நிறமானவை எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இரண்டாவது நபர் 45 வயது மதிக்கத்தக்கவராகவும் 5 அடி 10 அங்குல உயரமும் கறுப்பு மேனியைக் கொண்ட இவர் சற்றுப் பருமனான தோற்றமுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேற்படி இருவர் தொடர்பாக தகவல் தெரிந்தால் சிறீலங்கா காவல்துறையின் தலைமையகத்துக்குத் தெரியப்படுத்துமாறு சிறீலங்கா காவல்துறை அறிவித்துள்ளது.

மேற்படி நபர்களின் படங்கள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரும் வெளியிடப்பட்டது. இதனடிப்படையில் அதில் ஒருவர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அணியிலுள்ள இராணுவவீரரான கப்டன் திஸ்ஸ விமரவீரவின் படத்துடன் ஒத்துப் போவதாக செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து இவர் கைதுசெய்யப்பட்டு இராணுவ தடுப்புக்காவலில் உள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment