யாழ் குருநகர் கடலில் காணாமல்போன 3ஆவது மீனவர் பாலைதீவில் சடலமாக மீட்பு(காணொளி)

319 0

jaffna-bodyயாழ்ப்பாணம் குருநகர் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்று காணாமல்போன மூன்றாவது மீனவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் 50 வயதுடைய கஸ்தூரி பத்மசிறீதர் என்ற மீனவர் பாலைதீவு கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கடற்படையினர் சடலத்தை கண்டுபிடித்து மீனவர் சங்கத்துக்கு தெரியப்படுத்தியதை அடுத்து மீனவர் சங்கம் சடலத்தை கரைக்கு கொண்டுவந்துள்ளது.சடலம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாக குருநகர் மீனவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதி நடா புயல் வீசிய தினத்தில் குருநகர் கடல் ஊடாக மீன்பிடிக்க படகு ஒன்றில் சென்ற மூவரில் நேற்றைய தினம், குணம் ஜெகன் என்ற மீனவர் சடலமாக மீட்கப்பட்டதுடன், ஸ்டெனிஸ்லஸ் மகேந்திரம் என்ற மீனவர் காயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.