ஊரடங்கு உத்தரவை மீறிய 150 பேர் கைது

246 0

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில், கடந்த 24 மணித்தியாலயத்தில் 150 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் முடக்க நிலையில் உள்ள பகுதிகளில் இருந்து, அநாவசியமாக வெளியேற வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.