வாகரை கட்டுமுறிவுப் பகுதியில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

294 0

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி கட்டுமுறிவுப் பகுதியில் உள்ளூர் துப்பாக்யுடன் ஒருவரை நேற்று புதன்கிழமை (04) மாலை கைது செய்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்குக் கிடைத்த தகவல்; ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று  மாலை குறித்த வீட்டை சுற்றிவளைத்து சோதனை செய்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் துப்பாக்கி ஒன்றை மீட்டதுடன் ஒருவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.