துருக்கி பூகம்பம்: 36 மணித்தியாலங்களின் பின்னர் 70 வயது முதியவர் உயிருடன் மீட்பு!

237 0

துருக்கியின் மேற்கு பகுதியிலுள்ள ஏகன் தீவுகளில் கடந்த 30 ஆம் திகதி 7.0 என்ற ரிச்டர் அளவிலான  சக்தி வாய்ந்த பூகம்பமொன்று   ஏற்பட்டது.

இப் பூகம்பத்தினால் கடற்கரையோரத்திலுள்ள  இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதோடு சுமார் 58 பேர் வரை உயிரிழந்துள்ளதாகக் கூறப்படகின்றது.

இந்நிலையில்   அப்பகுதியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 36 மணித்தியாலங்களாகப்  போராடிய  70 வயது முதியவரொருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.