உலக சுகாதார ஸ்தாபன்தின் தலைவரான டெட்ரோஸ் அதானாம் (Tedros Adhanom) ”கொரோனாத்தொற்றுடைய ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்தியிருந்ததால் தன்னை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாக டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” தான் தற்போது நலமாக இருப்பதாகவும் தனக்குக் கொரோனாத் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாவிடினும் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு சுகாதார விதிகளின்படி வீட்டிலிருந்தே பணிகளைத் தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.