’பயன்பாடற்ற காணிகள் குறித்து விவரங்களைத் திரட்டவும்’

263 0

யாழ். மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிகளிலும் உள்ள பயன்பாடற்ற, வாழ்வாதாரத்தை அதிகரிக்க கூடிய, அரச மற்றும் தனியார் காணிகள் தொடர்பான விவரங்களைத் திரட்டுமாறு, பிரதேச செயலாளர்களை யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் பணித்தார்.

‘அபிவிருத்தி மற்றும் வாழ்வாதாரத்துக்கு, பிரதேச வளங்களை பயன்படுத்தல்’ எனும் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணத்தில் உள்ள வளங்களை அடையாளப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலொன்று, யாழ். மாவட்டச் செயலகத்தில், நேற்று (27) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணத்தில், ஆட்களற்று பயன்பாடின்றி காணப்படும் காணிகளை, ஊடக நிறுவனம் ஒன்றின் பெயரில் உறுதிகள் தயாரிக்கப்பட்டு, அபகரிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் அது தொடர்பில் பிரதேச செயலாளர்கள் கூடிய கவனம் செலுத்துமாறும் பணித்துள்ளார்.

அத்துடன், காணிகளை அடையாளம் காண்பதில் உள்ள தடைகளை இஙன்கண்டு, அவற்றை நீக்குவது குறித்தும் நடவடிக்கை எடுக்குமாறும், பிரதேச செயலர்களுக்கு அறிவுறுத்தினார்.