பிறப்பு, இறப்பு சேவைகள் இடைநிறுத்தம்

216 0

கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக, நல்லூர் பிரதேச செயலகத்தில் பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ் வழங்கும் சேவைகள், இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், நல்லூர் பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்படும் சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

சேவை பெற வருபவர்களை பிரதேச செயலகத்தினுள் அனுமதிக்காது, அவர்களுக்கான சேவைகளுக்கான விண்ணப்பங்களை வெளியே வைத்தே உத்தியோகஸ்தர்கள் பெற்று, அவற்றை வழங்கி வருகின்றனர்.