வெள்ளவத்தை தொடர்மாடி குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா உறுதி

296 0

கொழும்பு – வெள்ளவத்தையில் அமைந்துள்ள தொடர்பாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை சந்தையை அண்மித்த பிரதேசத்தில் உள்ள தொடர்மாடி ஒன்றிலேயே குறித்த கொரோனாத் தொற்றாளர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வெளிநாடு செல்வதற்காக பி.சி.ஆர். பரிசோதனை செய்ய முற்பட்டபோதே அவருக்கு தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டது.

இதனையடுத்து சுகாதார அதிகாரிகள் அவரை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலும் அவரது வீட்டில் உள்ள இருவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேநேரம் கொரோனா தொற்றுக்கு உள்ளான குறித்த நபர், இந்தியப் பிரஜை எனவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.