டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையை இல்லாது செய்ய வேண்டும் என்று யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா கோரிக்கை விடுத்தார்.
மேலும்,
“தற்போது டெங்கு நோயானது யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள பரவ ஆரம்பித்துள்ளது. நேற்று முன் தினம் மாத்திரம் 5 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். இவர்கள் பாசையூர், சுழிபுரம், சுன்னாகம், அரியாலை, கோப்பாய் பகுதியை சேர்ந்தவர்கள்.
தற்போது மழைகாலம் ஆரம்பித்துள்ளதால் நுளம்பு பெருக்கம் அதிகமாக காணப்படும். எனவே யாழ் மாவட்ட மக்கள் சுற்றுச் சூழலினை மிகவும் தூய்மையாக பேண வேண்டியதும் அவசியமாகும் குப்பைகள், பிளாஸ்ரிக் போன்றவற்றினை இல்லாமல் செய்வதன் மூலம் டெங்கு நுளம்பு பெருகுவதனை கட்டுப்படுத்தலாம்.
டெங்கு நுளம்பு கடிக்கும் நேரமான காலை 9 மணி வரை அதேபோல் மாலை 4 தொடக்கம் 6 மணி வரை சிறு பிள்ளைகளுக்கு நுளம்பு கடிக்காமல் இருப்பதற்கான ஆடைகளை உடம்பு முழுவதுமாக போட வேண்டும்.” – என்றார்.

