ஒற்றையாட்சிக்குள் தமிழர் பிரச்சினையை தீர்க்க கூட்டமைப்பு இணங்கவில்லை – எம்.ஏ.சுமந்திரன் (காணொளி)

281 0

sumanthiran-voiceதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்குள் தமிழர் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஒருபோதும் இணங்கவில்லை என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பனாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இக்கருத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்;படுத்துவதற்காக எமது மக்கள் உயிர்த்தியாகம் செய்யவில்லை என பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தமிழ் ஊடகங்களில் திரிவுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட எம்.எ.சுமந்திரன் தமிழ் ஊடகங்களில் 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தியிருந்தால் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்ற கருத்து முற்றிலும் தவறானது என்று தெரிவித்ததுடன் ஆங்கிலப்பத்திரிகையில் அக்கருத்து சரியாக பிரசுரிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

தமது பாராளுமன்ற பேச்சு தொடர்பாக பாராளுமன்ற இணையத்தளத்தினைப் பார்வையிட முடியும் என்றும் தெரிவித்தார்.