பேருந்தில் பரவிய கொரோனா – கொழும்பு கடற்படை ஊழியர்கள் ஐவருக்கு தொற்று உறுதி!

244 0

தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

கொழும்பு-மத்துகம பேருந்தில் பயணித்த கொழும்பு கடற்படை கப்பல் துறை ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமை கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் ஏனைய கப்பல் துறை ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 4 ஊழியர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

குறித்த பேருந்தில் பயணித்த கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிப்புரியும் தாதி ஒருவர், பேருந்து ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.