பல்கலை மாணவர்கள் சுடப்பட்ட சம்பவம் ஏன் வீதி விபத்தாக பதிவு செய்யப்பட்டது விசாரணை செய்யுமாறு நீதவான் உத்தரவு

318 0

photo-1யாழ்.பல்கலைக்கழக இரு மாணவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வீதி விபத்து என்று பெய்யாக பதிவு செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்.நீதுவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்கரன் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்று மீண்டும் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் மேற்படி உத்தரவினை பறிப்பிடத்துள்ளார்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கொலை செய்யப்பட்ட இரு மாணவர்கள் சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் மன்றில் தோண்றியிருந்தார்.
வழக்கினை விசாரணை செய்த நீதவான் விசாரணை அறிக்கைகள் மன்றில் சமர்ப்பிக்கப்படாததை அடுத்து சந்தேக நபர்களை 14 நாட்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.