தாதியரின் மகளுக்கு கொரோனா

250 0

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக பாணத்துறை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையில் பணிப்புரிகின்ற தாதியர் ஒருவரின் மகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்தே வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அங்குள்ள அனைவரும், பி.சீ.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிர்வாகத்தினர் மேலும் கூறியுள்ளனர்.

கம்பஹாவிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணிப்புரிந்த பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, அவருடன் பணிப்புரிந்த, நெருங்கியவர்கள் என சிலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

தற்போது, நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை முன்னெடுக்காமல் இருப்பது பெரும் ஆபத்தான சூழ்நிலைக்கு வழிவகுக்கும் என சூழலியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 4523 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் இதுவரை 13பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.