வடகிழக்கு பருவமழை- முதலமைச்சர் 12ந்தேதி ஆலோசனை

270 0

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 12ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

வடகிழக்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 12ந்தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.

அக்.3வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. மாவட்டங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அரசு அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.

ஏரிகள், குளங்கள் தூர் வாருதல், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லுதல் குறித்தும் ஆலோசிக்கிறார்.