கம்பஹா – மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த மேலும் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி இதுவரை அங்கு அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1022 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 442 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 1,115 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் .

