டிரம்ப், மெலனியா விரைவில் நலம்பெற வேண்டும் -ஜோ பிடன், ஒபாமா பிரார்த்தனை

235 0

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பது கொரோனாவின் தீவிரத்தை நினைவூட்டியிருப்பதாக, ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளன்.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோர் விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாக, அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் கூறியுள்ளார்.
மிச்சிகன் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற ஜோ பிடன் பேசும்போது, அதிபர் டிரம்புக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது கொரோனாவின் தீவிரத்தை நினைவூட்டுவதாக தெரிவித்துள்ளார்.
ஜோ பிடன் மற்றும் அவரது மனைவி ஜில் பிடன் ஆகியோருக்கு இரண்டு முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் இருவரும் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.
இதேபோல் டிரம்ப் மற்றும் மெலனியா ஆகியோர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் கூறி உள்ளார்.