மத்திய அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

238 0

எஸ்.புதூர் பஸ் நிறுத்தம் அருகே நாம் தமிழர் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எஸ்.புதூர் பஸ் நிறுத்தம் அருகே நாம் தமிழர் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய தலைவர் வில்லியம் ராஜா தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நாம் தமிழர் மாநில உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சிவராமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.