அடுத்த கட்டச் செயற்பாடு என்ன? மாவை தலைமையில் தமிழ்க் கட்சிகள் கூடி ஆராய்வு

223 0

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் விவகாரத்தை அடுத்து தற்காலிகமாக ஒன்று சேர்ந்துள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள், தமது அடுத்த கட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் கூடின.

யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இந்தக் கூட்டம் இடம் பெற்றது. திலீபனின் நினைவு நிகழ்வுக்கு அரசு பல்வேறு தடைகளை தித்தது. இதன் காரணமாக தமிழ் தேசியப் பரப்பில் உள்ள 10 கட்சிகள் இணைந்து இதனை எதிர்க்கத் தீர்மானித்தன.

இவ்வாறு இணைந்த கட்சிகள் ஒன்றித்து அண்மையில் கதவடைப்புப் போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன. இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியப் பரப்பில் அடுத்த கட்டமாக எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் பத்துக் கட்சிகளும் நேற்று கூடி கலந்துரையாடின.