சிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,380 ஆக அதிகரித்துள்ளது.
இன்று (புதன்கிழமை) புதிதாக மேலும் 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இறுதியாக அடையாளம் காணப்பட்ட ஒருவர் அமெரிக்காவில் இருந்து நாடுதிரும்பி தனிமைப்படுத்தப்பட்டவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.