கொழும்பு துறைமுக ஊழியர்கள் 19 பேரிற்கு சுயதனிமைப்படுத்தல் உத்தரவு

243 0

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுடன் தொடர்பிலிருந்த 19 துறைமுக பணியாளர்களை சுயதனிமைப்படுத்தலை முன்னெடுக்குமாறு சுகாதார அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்திய எண்ணெய் கப்பலில் வந்த 17 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை பிசிஆர்சோதனைகள் மூலம் உறுதியாகியுள்ளது.

திருகோணமலையில் எண்ணெய் கப்பல் தரித்து நின்றவேளை அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

சோதனை முடிவுகள் வெளியானதை தொடர்ந்து கப்பலில் இருந்தவர்களைஇறங்குவதற்குஅனுமதிக்காத அதிகாரிகள் கப்பலை இந்தியாவுக்கு திருப்பிஅனுப்பியுள்ளனர்.

இதன் பின்னர் குறிப்பிட்ட கப்பல் கொழும்புதுறைமுகத்துக்கு சென்றது குறித்தும் துறைமுக ஊழியர்கள் சிலர் கப்பலில் ஏறியது குறித்தும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

தங்கள் குடும்பத்தவர்களுடன் தொடர்பிலிருந்த ஐவர் உட்பட கப்பலில் ஏறிய அனைவரையும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இவர்களுடன் நெருக்கமான தொடர்பிலிருந்தவர்களை அடையாளம் காண்பதற்கும் கொரோனா பரவலை தடுப்பதற்குமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.