கோப் குழுவின் நடவடிக்கைகளை  நேரடியாக அறிக்கையிட ஊடகங்களுக்கு அனுமதிப்பதா, இல்லையா?

265 0

கோப் குழுவின் நடவடிக்கைகளை  நேரடியாக அறிக்கையிட ஊடகங்களுக்கு அனுமதிப்பதா, இல்லையா? என்பது ​தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என தெரிவித்துள்ள கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், இந்த விடயம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை அடுத்த மாதம் 6ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் வலைத்தளத்திலேயே அவர் இது தொடர்பில்  தொடர்ந்து பதிவிட்டுள்ள அவர், நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்தமாக  ஊடகங்களைப் பயன்படுத்துவது   குறித்து ஆராய, நாடாளுமன்ற செயற்குழு தீர்மானித்துள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.